காலநிலை சீர்கேடு காரணமாக பிற்போடப்பட்ட போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக சிங்கள அரசு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறவுள்ள இந்த யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தில் முப்படையினர், சிவில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதன் முதலாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கடந்த மாதம் 20ஆம் திகதி காலி முகத்திடலில் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புடன் கூடிய கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் அத்தினங்களில் தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் இந்த வெற்றி விழா அணிவகுப்பு நிகழ்வுகள் பிற்போடப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே இந்த வெற்றி விழா நிகழ்வுகளை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்துவதற்கான ஒழுங்குகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் கூறியது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக