புதன், 16 ஜூன், 2010

சர்வதேசம் இலங்கையினை வற்புறுத்தக்கூடாது

சர்வதேசம் இலங்கையினை எந்த விதத்திலும் நிர்ப்பந்திக்க கூடாது. வற்புறுத்தக்கூடாது என்று அகாஷி கூறியுள்ளார்.2002 சமாதான காலத்தில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பினை சர்வதேச ரீதியாக முடக்குவதற்கும் சமாதான பேச்சுவார்த்தையினை குழப்புவதற்கும் காரணமாக செயற்பட்ட இரு நண்பர்கள் கொழும்பில் சந்தித்தனர். ஜப்பானின் சமாதான ஏற்பாட்டாளரும் மீள்குடியேற்றம், மீள் நிர்மாணத்துறை பிரதிநிதியுமான யசூசி அகாசி - வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது ஊடகவியலாலர்களுக்கு கருத்து தெரிவித்த அகாஷி இவ்வாறு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக