வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கத்தினால், தென்மேல் பருவப் பெயர்ச்சி காற்றின் வேகம் தீவிரமடைந்துள்ளதாக வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்றுடன் கூடிய காலநிலையானது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் ஒரு சில தினங்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் எனவும் திணைக்கள அதிகாரி எம். வசந்தகுமார் தெரிவித்தார்.மத்திய மலை நாட்டின் மேற்குப் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும். மேல், சப்பிரகமுவா, மத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் எனவும்,வடக்கு , கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேல் திசையில் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் காற்று, அடுத்து வரும் இரு தினங்களில் 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக