புதன், 2 ஜூன், 2010

ஒட்டுப்படை தலைவர் முரளிதரன் ....


அனைத்துலக தமிழினமும் ஏன் கூடவே வட இந்திய முக்கிய சினிமா நடிகர்கள் கூட புறக்கணித்த இந்திய திரைப்பட விழாவில் ஒட்டுப்படை தலைவர் முரளிதரன் தமிழ் அமைச்சர் என்று கலந்து சிறப்பித்துள்ளார்.
இன அழிப்பினை மேற்கொண்ட இரத்தக்கறை படிந்த சிறிலங்காவின் தலை நகர் கொழும்பில் இடம்பெறும் வட இந்திய சினிமா விழாவில் கலந்து கொள்ள கூடாதென அனைத்துலக தமிழர்களும் புறக்கணிக்கும் வேளையிலும் வட இந்தியாவின் முக்கிய முன்னணி சினிமா கலைஞர்கள், கேரளா, கர்னாடகா, ஆந்திர சினிமா கலைஞர்கள் உட்பட அனைவரும் இந்த விழாவினை புறக்கணித்த நிலையிலும் தமிழர்களுக்கு இழைத்த துரோகம் போதாது என முரளிதரன் என்கின்ற ஒட்டுக்குழு தலைவர் IIFA விழாவில் கலந்து கொள்கின்றார்.
இதில் ஆச்சரியம் என்னவெனில் தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்றேன் என கூறும் ஜயலத் ஜயவர்த்தன உட்பட கட்சி பேதம் இன்றி அனைவரும் கலந்து கொண்டு தமிழர்களுக்கு எதிரான போரை மீண்டும் நியாயப்படுத்தியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக