இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 2 ஜூன், 2010
ஒட்டுப்படை தலைவர் முரளிதரன் ....
அனைத்துலக தமிழினமும் ஏன் கூடவே வட இந்திய முக்கிய சினிமா நடிகர்கள் கூட புறக்கணித்த இந்திய திரைப்பட விழாவில் ஒட்டுப்படை தலைவர் முரளிதரன் தமிழ் அமைச்சர் என்று கலந்து சிறப்பித்துள்ளார்.
இன அழிப்பினை மேற்கொண்ட இரத்தக்கறை படிந்த சிறிலங்காவின் தலை நகர் கொழும்பில் இடம்பெறும் வட இந்திய சினிமா விழாவில் கலந்து கொள்ள கூடாதென அனைத்துலக தமிழர்களும் புறக்கணிக்கும் வேளையிலும் வட இந்தியாவின் முக்கிய முன்னணி சினிமா கலைஞர்கள், கேரளா, கர்னாடகா, ஆந்திர சினிமா கலைஞர்கள் உட்பட அனைவரும் இந்த விழாவினை புறக்கணித்த நிலையிலும் தமிழர்களுக்கு இழைத்த துரோகம் போதாது என முரளிதரன் என்கின்ற ஒட்டுக்குழு தலைவர் IIFA விழாவில் கலந்து கொள்கின்றார்.
இதில் ஆச்சரியம் என்னவெனில் தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்றேன் என கூறும் ஜயலத் ஜயவர்த்தன உட்பட கட்சி பேதம் இன்றி அனைவரும் கலந்து கொண்டு தமிழர்களுக்கு எதிரான போரை மீண்டும் நியாயப்படுத்தியுள்ளனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக