இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 12 ஜூன், 2010
தமிழர்களின் நினைவு சுமந்து அமெரிக்காவில் தபால் தலை
சிறீலங்காவில் நடைபெற்ற போரில் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புக்கள் துன்பங்களை நினைவுபடுத்தும் நோக்கத்துடன் ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்காவில் தபால் முத்திரையை வெளியிட்டுள்ளது. கார்த்திகை பூவை வைத்து பதிக்கப்பட்டுள்ள இந்த தபால் தலையின் முதல் தர தபால் சேவைக்கு பயன்படுத்தப்படும்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அமெரிக்காவினுள் முதல்தர வகுப்பில் தபால்களை அனுப்பும் 0.44 டொலர் பெறுமதியான முத்திரையை ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்க குடிமக்கள் தபால் முத்திரைகளை தாமே வடிவமைத்து வெளியிட முடியும் என அமெரிக்க தபால் சேவைகள் பிரிவு அண்மையில் புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பை சாதகமாக பயன்படுத்தி சிறீலங்காவில் துன்பப்படும் தமிழ் மக்களின் நினைவாக இந்த தபால் முத்திரை வெளியிடப்படுவதாக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பில் அமெரிக்க குடிமக்களின் கவனத்தை பெறமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக