சனி, 12 ஜூன், 2010

வன்னியில் மீள்குடியேற்றம் நடைபெற்ற பகுதிகளில் பரவலாக பாலியல்வல்லுறவுச் சம்வங்களில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுவருகின்றமை தொடர்பிலான நம்பகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.



விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் சிறீலங்காப் படையினரால் குடும்பப் பெண்கள் இருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் பல சம்பவங்கள் இடம்பெற்றமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதன் அடிப்படையில் கனகராயன்குளம் பெரியகுளம் என்கின்ற கிராமத்திலும் ஒரு பெண்மீது சிறீலங்காப் படையினர் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிராம மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது,


ஆனாலும் அது குறித்த மேலதிக விபரங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை.


இச்சம்பவங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அதே பகுதி கல்விவலயத்தினைச் சேர்ந்த பெயர்குறிப்பிடவிரும்பாத கல்வி அதிகாரி ஒருவர்,


அண்மைய நாட்களாக இவ்வாறான பல சம்பவங்கள் குறித்து அறியமுடிந்ததாகவும், மக்கள் அச்சம் காரணமாகவும், அதே சமூகத்தில் தொடர்ந்து வாழவேண்டிய நிலையில் இது குறித்து வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதுவதாலும் சம்பவங்கள் மூடிமறைக்கப்படுகின்றன.


இந்தவிடயங்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவோர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்கள் மீது மிருகத்தனமாக தமது வக்கிரத்தினைத் தீர்த்துவருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக