வெலிக்கடைச் சிறைச்சாலையில் தொடர்ந்து ஆறு வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 50 வயதுடைய ஒரு தமிழ்க் கைதி சிங்கள நீதிபதியைப் பார்த்து நியாயமான ஒரு கேள்வியை எவ்வித அச்சமுமின்றி கேட்டுள்ளார். அந்த கேள்வி அந்த சிங்கள நீதிபதியை சற்று செவி சாய்க்க வைத்துள்ளது என்றே நாம் கூறவேண்டும்.
அந்த துணிச்சலான தமிழ்க்கைதி நீதிபதியைப் பார்த்து “விடுதலைப் புலிகளின் முக்கிய பங்காளிகளாக விளங்கிய கருணா, பிள்ளையான் மற்றும் கே.பி (குமரன் பத்மநாதன்) ஆகியோர் தற்போது இலங்கை அரசாங்கத்தின் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கும் செல்லப்பிள்ளைகளாக உள்ளார்கள். ஆனால் ஒரு குற்றமும் செய்யாத தமிழர்களாகிய நாங்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக கொடிய சிறைகளில் ஏன் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றோம்? என்றார்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக