முற்றுப்புள்ளிகள் எல்லாம்
முடிவுரை அல்ல..
அடுத்த வாக்கியத்தின்
ஆரம்பமே...
'தோல்வி - சோர்வு '
இவையெல்லாம் உனை
பயங்கொள்ள வைக்கத் தான்
படைக்கப்பட்டன..
அரிசிமாவுக் கோலமிட்டு
எறும்புக்குகூட பசியாற்றிய
தமிழன் தான் இன்று
தன் மண்ணிலேயே அகதி...கலங்காதே தமிழனே..
லட்சியம் வெல்லும்நிச்சயம் ஒரு திகதி..
புல்கூட மிதி பட்டால்எழுந்து தானாய் நிற்கும்..புல் அல்லநீ தமிழா
நீ புலிப்படையின் வர்க்கம்..உணர்ந்து நீ எழுந்தால்
உலகம் உனது சொர்க்கம்..மூவேந்தர்கள் வளர்த்த நம்மூதாதையர் மொழியைபாவேந்தர் சொற்படிபாரெங்கும் பரப்புவோம்..
வா தமிழனே.. வென்று காட்டுவோம்..
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக