செவ்வாய், 14 செப்டம்பர், 2010

கிணற்றில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்

கைதடி வடக்கில்  காணாமல் போயிருந்தவரை தேடிய போது காணாமல் போயிருந்த நபர் கிணற்றில் இருந்து சடலமாக மிதப்பது தெரியவந்தது. வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் இவர் தவறுதலாக வீழ்ந்து இறந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. அயலவர்களின் உதவியுடன் சடலம் மேலே எடுக்கப்பட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கைதடி வடக்கை சேர்ந்த கந்தையா டபிளேஸ்வரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக