யாழ்ப்பாணத்தில் சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆபாசப் புத்தகங்கள் மற்றும் சீடீக்களின் விற்பனை, கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துக்களின் பாவனை போன்றவற்றை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் படையினர் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை படையினரே தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்து தமக்கு நெருக்கமானவர்கள் மூலம் மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே விநியோகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாகப் பணத்தினைப் பெற்றுக் கொள்ளும் யாழ்ப்பாண இளைஞர்கள் ஆடம்பரப் பிரியர்களாக மாறியிருப்பதாகவும் இவர்களில் பலர் கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துப் பாவனையை ஆரம்பித்திருப்பதாகவும் யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன.யாழ்ப்பாண இளைஞர்கள் வழிதவறிப் போவதைத் தடுப்பதற்கு வெளிநாட்டிலுள்ள உறவினர்களும் இளைஞர் யுவதிகளுக்கு பெருமளவு பணத்தை நேரடியாக வழங்குவதும் ஒரு காரணம் எனக் குறிப்பிடும் ஆர்வலர்கள் பண விடயத்தில் சற்றுப் பொறுப்புடன் நடந்து கொள்வது புலத்திலுள்ளவர்களின் கடமை எனவும் சுட்டிக் காட்டுகின்றனர்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக