செவ்வாய், 14 செப்டம்பர், 2010

அச்சுவேலியில் வெள்ளை வானில் கடத்தல் சம்பவம்

யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு விவசாயியை வெள்ளை வான் கடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. கப்பம் கோரலுடன் தொடர்பு பட்டதாகவே இக் கடத்தல் சம்பவம் இடம் பெற்றதாகவும்  செய்திகள் தெரிவிக்கின்றன. கடத்தலுடன் தொடர்புபட்டவர்கள் இரண்டு லட்சம் கோரியதாகவும் பின்னர் ஒருலட்சமாக அக் கோரிக்கை மாறியதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் கடத்தப்பட்ட அன்றைய தினம் மாலையிலேயே அவர் யாழ் நகரப்பகுதியில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. 44 வயதுடைய கே.சிவகுமார் என்பவரே கடத்தி விடுவிக்கப்பட்டவர் ஆவார். இவர் விடுவிக்கப்பட்டமைக்கு கடத்தல்காரர்களால் கேட்கப்பட்ட பணம் கொடுக்கப்பட்டது காரணமா என்பது அறியமுடியவில்லை. பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக