இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 14 செப்டம்பர், 2010
முல்லைத்தீவு நகர்ப் பகுதியில் புத்தவிகாரை.
வடக்கின் பெரும்பாலான பகுதிகளில் புத்தவிகாரைகள் கட்டப்பட்டுள்ளன. இந்து வழிபாட்டுத் தலங்கள் பெருமளவு நிர்மூலமாக்கப்பட்டு பாழடைந்த நிலையில் கைவிடப்பட்டுள்ள நிலையில் புதிதாக புத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவது குறித்து கடுமையான அதிருப்திகள் வெளிக்கிழம்பியுள்ளன. குறிப்பாக இது ஒரு திட்டமிட்ட கலாசார அழிப்ப்பாகவும் ஆக்கிரமிப்பாகவும் ஆழும் தரப்பினால் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் .முல்லைத்தீவு நகர்ப் பகுதியின் மையத்தில் புதிதாக ஒரு புத்தவிகாரை கட்டும் பணியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக