இலங்கை பிரச்சினைகளை மூடிமறைக்க ஐ.நா.செயலர் முயற்சிப்பதாக இன்னர் சிட்டி பிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் அவரது பேச்சாளர் மார்ட்டின் சினர்கீ ஆகியோர் இலங்கை, சூடான் போன்ற நாடுகளில் தீவிரமிக்க விடயங்கள் குறித்து கருத்து வெளியிடாமை குறித்து இன்னர் சிட்டி பிரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நாளாந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது இலங்கை, சூடான் மற்றும் கொங்கோ போன்ற நாடுகளில் முக்கியமான பிரச்சினைகள் குறித்து எந்தக் கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடு கள் சபையினால் ஆலோசனைக் குழு நியமிக் கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் அது இயங்கவில்லை என்பதுடன் அதன் நான்கு மாதகால அவகாசம் குறித்த தகவல்களும் வெளியாக வில்லை.இந்த நிலையில் பான் கீ மூன் குறித்த நாடுகளின் பிரச்சினைகளை மூடிமறைக்க முயற்சிப்பதாக இன்னர் சிட்டி பிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
கொங்கோவில் இடம்பெற்ற இனப் படுகொலை மூடிமறைப்பதற் காகவே அவரது விஜயமும் அமையவுள்ளதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.இதேவேளை இந்த மாதம் நடை பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுக் கூட்டத்தை தமது இரண்டாவது பதவிக்காலத்தில் நீடித்துக்கொள்வதற்காக பயன்படுத்தும் முயற்சியில் பான் கீ மூன் இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக