விடுதலைப்புலிகளின் முன்னாள் வெளி நாட்டு பொறுப்பாளர் கே.பி. தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அதிருப்தி கொண்டதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களை அடையாளம் காணவும் விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு தொடர்புகளை அறிந்துகொள்ள வுமே கே.பியை அரசாங்கம் பயன்படுத்துவதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார். அத்துடன் கே.பி.யை பயன்படுத்தி வெளி நாட்டு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலையை தோற்றுவிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த மூன்றாம் திகதி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது, இறுதி யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளின் உறுப் பினர்களை மீட்க முயற்சித்த கே.பி தற்போது அரசாங் கத்திற்கு ஆதரவாக உள்ளமை குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.எனினும் இந்தக் கருத்துகள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் அதிருப்தி அடைந்ததுடன் விமல் வீரவன்சவை எச்சரித் துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக