திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்ற கடத்தல் சம்பவங்களுக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிரதி அமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன் மற்றும் கடற்படையினர் ஆகியோரே காரணம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்
.
திருகோணமலையில் நேற்றைய தினம் கற்றுக் கொண்டப் பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னாள் சாட்சியம் வழங்கும் போது அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையில் மொத்தமாக 383 பேர் சாட்சியங்களை வழங்கியுள்ளனர். அவற்றுள் 80 சதவீதமானவர்கள், தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் காணாமல் போனமை மற்றும், கடத்தப்பட்டமை தொடர்பிலேயே தமது முறைப்பாடுகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கருணா மற்றும் பிள்ளையான் தரப்பினர் தமது உறவினர்களை கடத்தி, பணம் மற்றும் காணிகளை கப்பமாக கோருவதாக அவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தங்களை பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பு தரப்பினரே, பல சமயங்களில் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் அவர்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக