செவ்வாய், 21 டிசம்பர், 2010

ஆயுததாரி பிள்ளையானால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொள்ளவும்

ஆயுததாரி பிள்ளையானின் டென்மார்க் வருகையை கடந்த வாரமே அறிந்த டென்மார்க் தமிழர் பேரவையின் மானிட விவகார குழுவின் சிறப்புப்பிரிவினர் டென்மார்க் அரசின் அனைத்துலக குற்றவியல் பிரிவினரிடம் தமிழ் மக்கள் மீது ஆயுததாரி பிள்ளையான் புரிந்த மானிடத்திற்கெதிரான குற்றங்களில் சிலவற்றை சேகரித்து டென்மார்க் தமிழர் பேரவையின் வழக்கறிஞர் ஊடாக முறையிட்டுள்ளனர் .ஆயுததாரி பிள்ளையானால் படுகொலை செய்யப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், மனிதவுரிமைசெயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பான மேலதிக விபரங்களையும் ஆதாரங்களையும் உடனடியாக டென்மார்க் தமிழர் பேரவையினர் எதிர்பார்க்கின்றனர். ஆயுததாரியால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் ஆயுததாரி பிள்ளையான் தொடர்பான வழக்கை விசாரணை செய்து வரும் டென்மார்க் காவல்துறையின் விசேட பிரிவினரிடம் தங்கள் பதிவுகளை நேரடியாக மேற்கொள்ள டென்மார்க் தமிழர் பேரவையினரை தொடர்புகொள்ளவும்.
ஆயுததாரி பிள்ளையான் மற்றும் அவனுடன் டென்மார்க் வந்துள்ள சகாக்கள் தொடர்பான விபரங்களையும் ஆயுததாரிகள் டென்மார்க்கில் தங்கியிருக்கும் விபரங்களையும் உடனடியாக டென்மார்க் தமிழர் பேரவைக்கு தெரிவித்து ஆயுததாரிகள் மீதான நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு டென்மார்க் வாழ் தமிழ்மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலதிக தொடர்புகளுக்கு :
மின்னஞ்சல்:
forum@dansktamilskforum.dk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக