விசுவமடு, ஒட்டுசுட்டான், கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான (தமிழ்?) மக்கள் ஒன்றிணைந்து மகிந்தவுக்கு ஆதரவான இப்போராட்டத்தில் ஈடுபட்டதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா தேசிய கொடியை ஏந்தியவாறு, கைகளில் பல கோசங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கி இப்போராட்டத்தை அவர்கள் நடத்தியுள்ளனர். விடுதலைப்புலிகள் எங்கள் வாழ்வை அழித்தனர்.
வெளிநாடுகளில் புலம்பெயர் மக்கள் எங்களுக்காக மேற்கொண்ட போராட்டத்தினால் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே எங்களை விடுவித்தார். அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். ஒன்றுபட்ட நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதிக்கு கைகொடுப்போம் என்ற வாசகங்கள் இப்பதாகைகளில் ஆங்கிலத்திலும், தமிழிலும் அச்சடிக்கப்பட்டுள்ளன.
புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் எதிர்ப்பார்ப்பாட்டங்களால், எங்களது வாழ்வு மேலும் சீரழியும். அதைவிடுத்து, அரசின் புனர்நிர்மாண பணிகளுக்கு உதவிபுரியுங்கள் என அவர்கள் சார்பில் கோரிக்கையும் வெளியிட்டுள்ளன.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக