இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
103 சிறுமிகளை கற்பழித்த காமுக மருத்துவர்
அமெரிக்காவில் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ஒருவர் கடந்த பல ஆண்டுகளில் 103 சிறுமிகளை கற்பழித்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உலகிலேயே நடந்துள்ள மிக மோசமான பாலியல் குற்றம் இது என்று கருதப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள டேலவேர் மாகாணத்தில் குழந்தைகள் சிறப்பு மருத்துவராக இருப்பவர் எர்ல் பிராட்லி. இவர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
இவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டதால் இவர் 103 சிறுமிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது 160 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெலவேர் மாகாணத்தில் மிக அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட வழக்காக இது உள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே அந்த மருத்துவரின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 1998ம் ஆண்டு முதல் இந்த படுபாதகச் செயலை அந்த மருத்துவர் செய்து வந்துள்ளார். அவ்வாறு குழந்தைகளை பாலியல் கொடுமைப்படுத்தும் போது அதனை அவர் வீடியோவிலும் பதிவு செய்து வைத்துள்ளார்.
இதனிடையே பிராட்லியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் பாதிக்ப்பட்டவர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ புகார் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக