செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

சிறீலங்காவும் – மாலைதீவும் புலனாய்வுத் தகவல்கள் பரிமாறிக்கொள்ளும்

சிறீலங்காவிற்கும் மாலைதீவிற்கும் இடையிலான புலனாய்வுத் தகவல்கள் பரிமாறிக்கொள்வது தொடர்பான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கை குறித்து மாலைதீவை எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகிதபோகல்லகம தெரிவித்துள்ளார். மாலைதீவு வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் வேறு வழிகளில் அவர்களது இலட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள முனைப்புக் காட்டிவருவதாகவும் ரோகிதபோகல்லகமவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறீலங்கா மாலைதீவு போன்ற நாடுகளை மையங்கொண்டு இவர்கள் செயற்படக்கூடும் என்றும் எனவே முக்கியமான தகவல்களை இரு நாடுகளும் பகிhந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையில் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்வது தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாதிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக