இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
அமெரிக்க நீதிமன்றில் இன்று வாதாடுகிறார் ருத்திரகுமாரன்
தீவிரவாதிகள் எனப் பட்டியலிடப் பட்ட அமைப்புகளுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வதைக் கட்டுப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் இன்று நேரில் ஆஜராகி வாதிடவுள்ளார் என இணையத்தளத் தகவல்கள் கூறுகின்றன.
மனிதாபிமான உதவிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்தல் இவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு களை தெளிவாக்கும்படி அவர் நீதிமன்றத் தில் வாதிடுவார் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறையால் தீவிரவாத அமைப்பு என்று பட்டியலிடப்பட்ட இயக்கங்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது அந்நாட்டு தேசப்பற்றுச் சட்டத்தின்படி குற்றமாகும். இந்நிலையில், அது தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி ருத்திரகுமாரன் வாதாடவுள்ளார் என்றும், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் முதல் தமிழர் அவர்தான் என்றும் இணையதளங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக