செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

அவுஸ்திரேலியா வருபவர்களுக்கு புதிய பாதுகாப்பு சோதனை

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படும் 10 நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியா வருபவர்களுக்கு முகம் மற்றும் கைரேகை பரிசோதனைகள் உள்ளிட்ட புதிய பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாடு அறிவித்துள்ளது. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட் தெரிவித்தார். அதே சமயம் பாதுகாப்பு சோதனைக்கு உள்ளாக்கப்பட உள்ள பட்டியலில் எந்தெந்த நாடுகள் இடம்பெற்றுள்ளன என்ற விவரத்தை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் அந்த பட்டியலில் இருப்பதை கெவின் சூசகமாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக