இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
அவுஸ்திரேலியா வருபவர்களுக்கு புதிய பாதுகாப்பு சோதனை
பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படும் 10 நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியா வருபவர்களுக்கு முகம் மற்றும் கைரேகை பரிசோதனைகள் உள்ளிட்ட புதிய பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட் தெரிவித்தார்.
அதே சமயம் பாதுகாப்பு சோதனைக்கு உள்ளாக்கப்பட உள்ள பட்டியலில் எந்தெந்த நாடுகள் இடம்பெற்றுள்ளன என்ற விவரத்தை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
இருப்பினும் சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் அந்த பட்டியலில் இருப்பதை கெவின் சூசகமாக தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக