புதன், 10 மார்ச், 2010

3 மில்லியன் உல்லாச பயணிகள் வடக்கிற்கு பயணம்

கடந்த இரண்டு மாதங்களில் 3 மில்லியன் உல்லாசப் பயணிகள் வடக்கிற்குச் சென்றுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் அறிக்கை யொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஏ9 பாதை மக்களின் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதன் விளைவாக நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் பல பாகங்களுக்கும் சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களின் எண்ணிக்கை 3 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகளவிலான உல்லாசப் பயணிகள் வடக்கிற்குச் சென்றுள்ளதானது அங்குள்ள வர்த்தகர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமெனக் கூறப்படுகிறது. அதிகளவிலான உல்லாசப் பயணிகளின் வருகையையடுத்து யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் பல நகரங்களில் வர்த்தக நிலையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் உணவுப் பொருட்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கருத்திற் கொண்டு வடக்கிலுள்ள புராதன நகரங்கள் மற்றும் உல்லாசப் பயணிகளை கவரக்கூடிய இடங்களை அழகுபடுத்துமாறும் திருத்தியமைக்குமாறும் உல்லாசத்துறை அமைச்சு அதிகாரிகளைப் பணித்துள்ளதாகவும் அவ் வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக