இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 10 மார்ச், 2010
ஏமாற்றத்துடன் பெற்றோர் திரும்பினர்,,,
இன்று ஊனமுற்ற போராளிகளை விடுவிப்பதாக அரசாங்கம் கூறியதனால் பெற்றோர்கள் அவர்களை பொறுப்பெடுக்க சென்றனர். ஆனால் இன்று முன்னர் கூறியது போன்று விடுவிக்கப்படவில்லை. முகாமில் இருந்த அனைத்து போராளிகளும் தம்மையும் விடுவிக்க வேண்டும் என ரகளை செய்ததாகவும். இதனாலேயே விடுவிக்கப்படவில்லை என்றும் இராணுவத்தினர் கூறியுள்ளனர். பொராளிகள் தமக்குள்ளேயே அடிபட்டதாகவும் அத்துடன் அனைவரையும் ஒன்றாக விடுவிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் கூறப்படுகின்றது. இதனால் அங்கிருக்கின்ற அதிகாரிகள் இவ்வாறு சண்டை பிடித்தால் பூசாவுக்கே அனுப்பபடுவீர்கள் என எச்சரித்துள்ளனர். மேலும் இந்த சண்டைகளை அங்கு இருக்கின்ர அதிகாரிகளே மூட்டி விட்டதாகவும் இப்போது சண்டை பிடிக்காது விடில் உங்களை விடமாட்டார்கள் ஆகவே ஊனமுற்ற போராளிகளுடன் உங்களையும் விடுவிக்கும்படி போராடுமாறு கூறியதாக அங்கு இருக்கின்ற போராளிகள் கூறியுள்ளனர். எது எவ்வாறு இருப்பினும் ஊனமுற்ற போராளிகள், அங்கவீனமான போராளிகளை விடுவிப்பதனை ஏனையோர் தடுக்க கூடாது என போராளிகளை பொறுப்பெடுக்க சென்ற பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக