புதன், 10 மார்ச், 2010

கனடாவில் தமிழர்களும் பெரும்பான்மையினராகும் நிலை

கனடாவின் இரண்டு பிரதான நகரங்களில் சிறுபான்மையினராக வாழும் மக்கள் 2031 ஆம் ஆண்டில் பெரும்பான்மையினராக மாறும் நிலை உள்ளதாக கனடிய புள்ளிவிபரம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இலங்கை தமிழர்கள் உட்பட்ட பாகிஸ்தானியர், இந்தியர் ஆகியோர் பெரும்பான்மையினராக மாறும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியிலான பல்லின மக்களை தமது நாட்டிற்கு வரவேற்கும் கனடிய மக்கள், இதன் மூலம் தமது பெரும்பான்மைத் தன்மையை இழக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அந்த புள்ளிவிபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டு கனடாவின் ஐந்து சதவீதமான சுமார் 10 லட்சம் மக்கள் மட்டுமே சிறுபான்மையினராக அடையாளம் காணப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை, 2031 ஆம் ஆண்டின் போது 53 லட்சமாக அதிகரிக்கும் என சனத்தொகை மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 2006 ஆம் ஆண்டுவரை கனடாவில் குடியேறிய இலங்கைத் தமிழர்கள் உட்பட ஆசிய நாட்டவர்கள் 13 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2031 ஆம் ஆண்டு 41 லட்சமாக அதிகரிக்கும் எனவும் அந்த புள்ளிவிபரத்தில் மேலும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் பிறப்பு வீதத்தின் அடிப்படையிலேயே இந்த எதிர்வு கூறப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரத்தால், தமிழ் மக்களின் பாதிப்பை நன்கு உணர்ந்த, அந்த காலகட்டத்தில் கனடிய பிரதமராக கடமையாற்றியவர் இலங்கை தமிழர்களுக்கு அரசியல் அந்தஸ்து வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் செயற்பட்டார். இதற்கு ஏற்ற வகையில் கனடிய யாப்பில் உரிய சட்டரீதியான திருத்தங்களையும் அவர் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக