புதன், 10 மார்ச், 2010

அழைக்கிறார் எலும்பு சூப்ப,அமைச்சர் விநாயகமூர்த்தி(கருணா)

அமைதியாக வாழ்வதற்கு விரும்புகிற, நியாயமான தீர்வை தமிழர்களுக்கு கிடைக்க விரும்பும் முந்தைய போராளிகளை இணைந்து பணியாற்ற கருணா அழைப்பு விடுத்திருக்கிறார் . ராஜபக்ஷே அரசில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சராக இருப்பவர் கருணா. இவர் முன்பு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வலதுகரமாக இருந்தவர். பின், அவரிடமிருந்து பிரிந்து விட்டார். அப்போது அவர், அம்மான் அல்லது விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்பட்டார். கொழும்பில் நேற்று நடந்த புலிகள் குறித்த சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது: ஒவ்வொரு பயங்கரவாதக் குழுவிலும், என்னைப் போல் அமைதியான தீர்வை விரும்புபவர்களும் இருக்கத்தான் செய்வர். அரசும், அதிகாரிகளும் அந்த அமைதி விரும்பிகளை வரவேற்று அங்கீகரிக்க வேண்டும். அவர்கள் அரசுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் பிரச்னைகளுக்கான தீர்வைக் காண வாய்ப்பளிக்க வேண்டும். இப்போது, தமிழர்களின் மீள் குடியேற்றம் மற்றும் அவர்களது வறுமையைப் போக்கும் செயல்களில்தான் அரசின் கவனம் இருக்க வேண்டும். இவ்வாறு கருணா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக