இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 10 மார்ச், 2010
இந்திய "ரோ" அமைப்பு மகிந்தவிற்கு எதிராக செயற்பட்டதாம்
கடந்த ஜனவரி 26 இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ரோ எனப்படும் இந்திய வெளிதொடர்பு புலனாய்வுத் துறையினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்பட்டதாக கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலில் தோல்வி அடைவதற்கு ஏதுவாக அவர்கள் செயற்பட்டதாக தபால் துறை அமைச்சர் நந்தன குணதிலக குற்றம் சுமத்தியுள்ளார் ரோ எனப்படும், இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் ஒப்புநோக்கு கண்காணிப்பகம், மற்றும், வெளித்தொடர்பு புலனாய்வு அமைப்பு என்பன ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, இலஙகைக்கு, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதியை சந்தித்ததைத் தொடர்ந்து, அவர் முன்னிலையில் நந்தன குணதிலக இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இந்திய அரசு மகிந்தவுக்கு ஆதரவு அழிப்பதாகவும் ரோ அமைப்பு மகிந்தவிற்கி எதிராக செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக