புதன், 12 மே, 2010

வேண்டுகோள்!


என் சகோதர்களே! நீங்கள் மிண்டும் மிகப்பெரிய வரலாற்று பிழை விட்டுக்கொண்டே போகிறீர்கள். இதனை என்றுதான் உணரப் போகிறீர்கள் என்பதுதான் புரியாமல் இருக்கிறது. சகோதரரே! எமது விடுதலை புலிகளுடன் நீ கைகொடுத்து இருப்பின் இவ்வாறு நாம் அநாதிகள் ஆகியிருக்கமாட்டோம். அவன் போராட்டும் எனக்கென்ன என்ற எல்லோரின் சுயநலம் தான் நாம் படும் துன்பங்களின் ஆணிவேர். அண்ணன் திலீபன் தன்னைக்கொடுது ``மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரம் மலரட்டும்`` என்றான். புரியாத முட்டாள்கள் நாம். இன்றைய நிலை என்ன? நாடுகடந்த தமிழீழம் என்று சிறு குழுவும், நாம் தமிழர் என மற்றும் சிலரும்,கனடாவில் சிலரின் ஆர்பாட்டமும் நடக்கிறது. மற்றைய தமிழர் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் தமிழர் தான என ஒருகணம் சிந்தியுங்கள்! உங்களுக்கு முன்னுக்கு போக முடியாவிட்டால் அவர்களுடன் இணையுங்கள். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை மரியாதைக்குரிய உருத்திரகுமார் அவர்கள் உங்களுக்கு உருவாக்கிதந்துள்ளார். ஒருவர் முன்வரும் போது அவரை முற்றுமுழுதாக நாம் பயன்படுத்த வேண்டும்.மீண்டும் வரலாறு பிழைக்கா பின் கவலை படுவதை விட புலம்பேர்தமிழர்கள் நீங்கள் அவர்களின் கரங்களை பற்றிக்கொள்ளுங்கள். ஒன்றுபட்ட குரலாய் தனி ஈழம் என்று ஒருமித்து நில்லுங்கள். என் மதிப்புக்குரிய இளையோர் அமைப்புகளே! வருகின்ற 18 ம் திகதி உலகெல்லாம் முள்ளி வாக்கால் அவலம் கேட்டும் கேட்காமல் யார் எல்லாம் இருந்தானோ அவனின் காதுகளை உங்கள் குரல் கிழிக்கவேண்டும். தமிழர்களை மாபெரும் சக்தியாக உருமாற்றுங்கள். செயல் திறன் மிக்க அமைப்பாக உங்களை உருமாற்ருங்கள். மீண்டும் நீதிகேள்! மீண்டும் மீண்டும் நீதிகேள்! மக்கள் புரட்சி வெடிக்கும் சுதந்திர தமிழீழம் மலரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக