புதன், 12 மே, 2010

அம்பாறை பாடசாலை மாணவ, மாணவிகளின் ஆபாச இறுவெட்டு!

அம்பாறையில் அப்பிரதேச மாணவர்களினால் எடுக்கப்பட்ட ஆபாச இறுவெட்டுக்கள் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து இவ்வாறான இறுவெட்டுக்களை பொலிஸார் கைப்பற்றியதோடு இரு மாணவர்களையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். குறித்த இறுவெட்டுக்களை விற்பனை செய்த கடை உரிமையாளரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசரணையின்போது பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்பிரதேசத்தில் உள்ள ருகுணகம என்ற பாடசாலையில் கல்விகற்கும் இருமாணவிகளும், மூன்று மாணவர்களுமே இவ்இறுவெட்டில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மற்றவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். மாணவிகளை காதலிப்பது போல் நடித்தே இவ் இறுவெட்டுக்கள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக