புதன், 12 மே, 2010

இளைஞனை வெள்ளை வான் கடத்தியது

மட்டக்களப்பு மாவட்டம், ஜீவபுரம் சந்திவெளிப் பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளை வானொன்றில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
 யோகராசா ஜெயசீலன் (24 வயது) என்பவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இவர் முன்னர் போராட்டக் குழுவொன்றில் உறுப்பினராகவிருந்து வன்னிப்போரின் பின்னர் கைதிகள் தடுப்பு முகாமில் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டு ஊருக்குத் திரும்பிய இவர் வீட்டின் அருகே பலசரக்குக் கடையொன்றை நடத்தி வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு வான் ஒன்றில் வீட்டிற்கு வந்த குழுவினர் இவரது பெயரைக்கூறி அழைத்துள்ளனர். அதன்பின்னர் வேலை வாய்ப்பொன்றை பெற்றுக்கொடுக்க உரிய தாஸ்தாவேஜுகளை தருமாறு கூறியுள்ளனர். ஆவணங்களைக் கொடுத்தபோது இவரைத்தூக்கி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை வானில் வந்தவர்களில் ஒருவர் நன்றாகத் தமிழ் பேசியதாகவும் ஏனையோர் கொச்சை மொழியில் கதைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக