புதன், 21 ஜூலை, 2010

51ஆவது படையணியின் தலைமைசெயலகம் கோப்பாய் துயிலுமில்லத்தில் அமைப்பு

யாழ்ப்பாணம் கோப்பாயில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்தை அகற்றி அங்கு சிறிலங்கா இராணுவத்தின் 51-வது கட்டளைத் தலைமையகத்தை நிறுவ இராணுவத்தினர் திட்டமிட்டுள்ளனர்.



சிறிலங்கா இராணுவத்தின் 51-வது படையணிக்கான கட்டளைத் தலைமையகம் தற்போது யாழ்.நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சுபாஸ் விடுதி மற்றும் அதனை அண்டியபகுதிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமில் இயங்கிவருகிறது.


இந்நிலையில்,யாழ்.நகர் சுபாஸ் விடுதிப்பகுதியில் இயங்கும் 51-வது இராணுவத் தலைமையகத்தைக் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.


தற்போது இராணுவத் தலைமையகம் உள்ள சுபாஸ் விடுதிக் கட்டடம் விரைவில் உரிமையாளர்களிடம் ஒப் படைக்க வேண்டியுள்ளதினாலேலே 51-வது படையணித் தலைமையகத்தை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு மாற்றவுள்ளதாகப் படைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக