யாழ்ப்பாணம் கோப்பாயில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்தை அகற்றி அங்கு சிறிலங்கா இராணுவத்தின் 51-வது கட்டளைத் தலைமையகத்தை நிறுவ இராணுவத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தின் 51-வது படையணிக்கான கட்டளைத் தலைமையகம் தற்போது யாழ்.நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சுபாஸ் விடுதி மற்றும் அதனை அண்டியபகுதிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமில் இயங்கிவருகிறது.
இந்நிலையில்,யாழ்.நகர் சுபாஸ் விடுதிப்பகுதியில் இயங்கும் 51-வது இராணுவத் தலைமையகத்தைக் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது இராணுவத் தலைமையகம் உள்ள சுபாஸ் விடுதிக் கட்டடம் விரைவில் உரிமையாளர்களிடம் ஒப் படைக்க வேண்டியுள்ளதினாலேலே 51-வது படையணித் தலைமையகத்தை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு மாற்றவுள்ளதாகப் படைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக