வன்னிக்குச் சென்று திரும்பிய நோர்வே ஊடகவியலாளர் மாயாமானது தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வன்னிக்குச் சென்று திரும்பிய பெரீன் ரக்கோ என்ற பெண் ஊடகவியலாளர் காணாமல் போன சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வன்னியில் இராணுவத்தினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குறித்த ஊடகவியலாளர்கள் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நோர்வேயின் என்.ஆர்.கே வானொலிச் சேவைக்காக கடமையாற்றிய பெண் ஊடகவியலாளரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சுற்றுலாப் பயணி ஒருவரைப் போன்று குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறி குறித்த பெண் ஊடகவியலாளர் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக