சனி, 17 ஜூலை, 2010

விடுதலையின் மூச்சு ....

குருதி உடுத்தி வலம் வருகிறாள்
விடுதலை!வீரர் வீராங்கனையர் நெற்றியில் முத்தமிட்டு....
ஒற்றைச் சூரியனாய்க் கீழ்வானில்முகம் உயர்த்தி
வெற்றிச் சுடரொளியில் தமிழீழமுகம் மலர்த்தி
கொத்திச்செல்வேன் எனக்கொக்கரிக்கும் ராஜபட்சி
நீள் சிறகு துணிக்கநெடுவானில் வாள் உயர்த்தும்
தோழர்களுக்குத் தமிழ்மாலை சூட,

காலவெளியில் ரத்தகானம்பாடதுயிலும் மாவீரர் தொட்டில்களைத் தாலாட்டஉயிரின் கனலில் விடுதலை ஒளிவார்த்து
விண்ணுக்கும் மண்ணுக்கும்விரியும் ஒரு தீயாய்,
வீரர் வீராங்கனையர் மார்பூட்டும்ஒரு தாயாய்விரல் துடைக்கும்
நீள்கின்ற கண்ணீரின் கோடுகளை,விழிபொசுக்கும்
உடன்பிறந்த துரோகத்தின் காடுகளைநுரைசிவக்கும் கடல் அலையே!
மறுகரைக்குச் சொல்கநொறுங்காது தமிழீழம்
புலிப்படைதான் வெல்லும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக