குருதி உடுத்தி வலம் வருகிறாள்
விடுதலை!வீரர் வீராங்கனையர் நெற்றியில் முத்தமிட்டு....
ஒற்றைச் சூரியனாய்க் கீழ்வானில்முகம் உயர்த்தி
வெற்றிச் சுடரொளியில் தமிழீழமுகம் மலர்த்தி
கொத்திச்செல்வேன் எனக்கொக்கரிக்கும் ராஜபட்சி
நீள் சிறகு துணிக்கநெடுவானில் வாள் உயர்த்தும்
தோழர்களுக்குத் தமிழ்மாலை சூட,
காலவெளியில் ரத்தகானம்பாடதுயிலும் மாவீரர் தொட்டில்களைத் தாலாட்டஉயிரின் கனலில் விடுதலை ஒளிவார்த்து
விண்ணுக்கும் மண்ணுக்கும்விரியும் ஒரு தீயாய்,
வீரர் வீராங்கனையர் மார்பூட்டும்ஒரு தாயாய்விரல் துடைக்கும்
நீள்கின்ற கண்ணீரின் கோடுகளை,விழிபொசுக்கும்
உடன்பிறந்த துரோகத்தின் காடுகளைநுரைசிவக்கும் கடல் அலையே!
மறுகரைக்குச் சொல்கநொறுங்காது தமிழீழம்
புலிப்படைதான் வெல்லும்!
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக