தமிழீழ த்தேசியத்தலைவரின் இளைய புதல்வன் பாலசந்திரன் உட்பட கைது செய்யப்பட்ட போராளிகளை சிங்களப்படை சித்திரவதையின் பின்னர் கொன்றுள்ளதாக சிறிலங்கா இராணுவ அதிகாரி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அமெரிக்காவிடம் தஞ்சம் கோரிய இந்த அதிகாரி அங்குள்ள நீதிமன்ற நீதிபதி முன் நிலையில்
இந்த ஒப்புதல் வாக்குமூலத்தினை வழங்கியுள்ளார். இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பினரின் ஏற்பாட்டில் இந்த வாக்கு மூலம் பெறப்பட்டு 100 பக்க அறிக்கைகளாக தயாரிக்கபப்ட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில்,தேசியத்தலைவரின் புதல்வன் பாலச்சந்திரன்
சித்திரவதை செய்து கொல்லப்பட்டது.கொல்லப்பட்டவர்களது சடலங்களை தீமூட்டி எரித்தது.கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும்
இளைஞர்களை கடத்தி சித்திரவதை செய்து கொலை செய்தது.
தமிழர் பிரதேசங்களில் இராணுவ குடியிருப்புக்களை திட்டமிட்டு அமைப்பது.
போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அதிகாரி தனது வாக்கு மூலத்தின் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக