நாங்கள் உம் நிலத்துக்கு ஆசைப்படவில்லைநீயோ எம் நிலம்
வேண்டுமென்றாய்...முதுகெலும்பு இல்லாத புழு கூடபோராடித்தான்
சாகுமாம்..! நாங்கள் மட்டும் எப்படி தூக்கி கொடுப்போம் என
நினைத்தாய்....!!??அத்தோடு விட்டாயா..!?
எம் மண்ணில் பிணம்
விதைத்தாய்..!எம் பெண்டிரின்
கற்பை கருவறுத்தாய்..!பிஞ்சு
மழலைகள் என்று கூடப்பாராது தூக்கிலிட்டாய்..!
துண்டாக்கினாய்..!இருப்பிடத்தில்
குண்டு எறிந்தாய்..!நெருப்புக்
குண்டுகளின் பசி தீர்த்த எச்சங்கலாய்
எங்கள் உடல்கள்...!உண்ண உணவின்றி, உறங்க பாயின்றி, எத்தனைபேர் மரநிழலில்அட, மரத்தை கூட
நீ விட்டுவைக்கவில்லையே!பட்டினியால்
பலபேரும்.. நீகொட்டிய குண்டினாலே பல பேரும்துடித்து இறந்து
ஏன் உனக்கு வலிக்கவில்லை?மனித உடம்பெடுத்து வந்த சாத்தானா நீ? மாண்டவர்
மீளார் என துயர் ஆற்றலாம் ஆனால்இழந்தவர் துயர்
எப்படி போகும் ??கூடிவாழ்ந்த சொந்தத்தை....எறும்புபோல்
சேர்த்த சொத்தைஇழந்த துயர் கூட நாளடைவில் ஆறிவிடும்....ஆனால்
தன் அங்கம் இழந்தவர் துயரோ ஆயுள்வரை அல்லவா?'அரசன் அன்று
கொல்வான்தெய்வம் நின்று கொல்லும் என்பர்'உண்மையா என
தெரியாது ஆனால் இவர்களின் கதறலும் சாபமும்
நிச்சயம் உன்னை வந்துசூழும் இது
சத்தியம்..!!
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக