கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலைகளுக்கான தொலைத் தொடர்பு குறைபாட்டை தீர்க்கும் பொருட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் 52 CDMA தொலைபேசிகளை வழங்கியுள்ளார்.
தொலைபேசிகளை வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையில் காலை 10 மணிக்கு இடம் பெற்றது
வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கிளிநொச்சி கல்வி வலயத்தின் 50 பாடசாலைகளின் அதிபர்களிடம் CDMA தொலைபேசிகளை வழங்கியதுடன் பளை மற்றும் கண்டாவளை கோட்டக்கல்வி அலுவலகங்களுக்கான தொலைபேசிகளை கோட்டக்கல்வி அதிகாரிகளிடமும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், வலயக் கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள் என கல்விச் சமூகத்தினர் கலந்து கொண்டிருந்தனர். மேற்படி நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கான கிளிநொச்சி கல்வி வலய அதிபர்கள், கல்வி அதிகாரிகளின் வரவேற்பு வைபவமாகவும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக