செவ்வாய், 7 டிசம்பர், 2010

யாழ்.நவீன சந்தைப் பகுதிகளில் கலாசாரச் சீரழிவுகள்.!!!

யாழ்ப்பாணம் நவீன சந்தைப் பகுதியில் தனியார் கல்வி நிலையங்களுக்குச் சென்று விட்டு வீடுகளுக்குத் திரும்பாமல் தேவையற்ற விதத்தில் இளைஞர்களும், யுவதிகளும் அங்கும் இங்குமாக அலைந்து திரிவதுடன் கூட்டம் கூட்டமாக நின்று மிக மோசமான கலாசாரச் சீரழிவுகள்  செய்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பெண்கள் மீதான பாலியல் அடாவடித்தனங்களும் அப் பகுதிகளில் நிறையவே நடந்தேறுகின்றது. இதனால் அப் பகுதிகளில் பொலிஸாரின் பிரசன்னம் அதிகமாகவேயுள்ளது. இதேவேளை இவ்வாறு தேவையற்ற விதத்தில் நடமாடுவோர் மற்றும் கூட்டம் கூட்டமாக நிற்பவர்கள் மீது கடந்த வாரம் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க இப் பகுதிகளில் விபச்சார நோக்கத்திற்காகப் பல பெண்கள் வந்து நிற்பதாகவும் இதனால் அப் பகுதியில் மிக மோசமான கலாசாரச் சீரழிவு நடைபெறுகின்றது எனவும் அப் பகுதிகளில் வியாபார நிலையங்களை நடத்தி வருபவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் மேற்படி நவீன சந்தைப் பகுதி மற்றும் யாழ்.பஸ் தரிப்பிடம் ஆகியவற்றில் கலாசாரச் சீரழிவுகள் தாராளமாக நடைபெறுகின்றமை தொடர்பில் பல இணையத் தளங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக