இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 25 ஏப்ரல், 2010
சூரியன் தொடர்பான புதிய படங்களை நாஸா வெளியிட்டுள்ளது
சூரியன் தொடர்பான புதிய படங்களை நாஸா விண்வெளி ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதிஉயர் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கமரக்களினால் குறித்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சூரியனில் பல்வேறு வெடிப்புக்கள் இடம்பெற்று வருவதாகவும், வாயு வெளியேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளைப் பயன்படுத்தி சூரிய சக்தி மற்றும் சூரிய குடும்பம் பற்றிய புதிய ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என நாஸா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சோலர் டைனமிக் ஒப்சர்வேர்ட்டி எனப்படும் விசேட கமராவைக் கொண்டு சூரியனின் படங்கள் எடுக்கப்பட்டுள்ளதகாவும், ஐந்து வருடங்களுக்கு இந்த கமரா படங்களை விநியோகிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், சூரியன் பற்றிய ஆய்வுகளை பூரணப்படுத்த இன்னும் நீண்டகாலம் தேவைப்படும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த கமரா மிகவும் துல்லியமான படங்களை பல கோணங்களிலிருந்து எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக