இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 25 ஏப்ரல், 2010
சிவில் நிர்வாகம் இன்னமும் சிங்கள மொழியில் !
வடபகுதியில் காவல்துறை நீதி நிர்வாகத்துறை ஆகியன முழுமையாக சிங்கள மொழியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தமிழ் பொதுமக்களது வாக்கு மூலங்கள் சிங்களமொழியில் பெறபட்டு வருவதாகவும் இதனால் சிங்களமொழி தெரியாத பெரும்பாண்மை தமிழ் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் தெரியவருகிறது. யாழ் மாவட்ட நீதி மன்றங்கள் இதுதொடர்பில் சிறீலங்கா காவல்துறையினருக்கு அறிவுறுத்தியபோதும் அவர்கள் இதனை புறக்கணிப்பதாக தெரியவருகிறது. வடபகுதியில் கடமையாற்றும் காவல்துறையினருக்கு தமிழ்மொழி தெரியாததும் இங்கு தமிழ்மொழி தெரிந்த அதிகாரிகளை நியமிப்பதாக அரசு தெரிவித்தபோதும் எதுவுமே நடைபெறவில்லை என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது. இதேநடைமுறையே கிழக்கிலும் காணப்படுவதாக தெரியவருகிறது. இதேவேளை வடபகுதி காவல்துறை அதிகாரி தமிழ் காவல்துறை அதிகாரிகளை நியமிப்பதுதொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார். வடபகுதியில் தமிழ்காவல்துறை அதிகாரிகளை நியமிக்கும் நோக்குடன் விண்ணப்பங்களை கோரியிருந்தபோதும் பலர் விண்ணப்பித்தநிலையில் அரசு பின்னர் அதனை கைவிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக