மன்னார் தலைமன்னார் வீதியில் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களால் ஊடகவியவாளர் ஒருவர் நேற்று இரவு 8.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார். 54 வயதுடைய அந்தோனிமார்க் என்பவரே இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் வாகனங்கள் அதிகளவு சென்றதால் வெள்ளை வானில் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். மேலும் குறித்த ஊடகவியலாளரிடம் இருந்த ஆவணங்கள் சிலவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தாக்கப்பட்ட ஊடகவியவாளருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஊடகவியலாளர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, தன்னை தாக்கிய இனந்தெரியாத நபர்களையும் அடையாளம் காட்ட முடியும் எனவும் குறித்த வேனில் இருவர் இருந்தாகவும் தெரிவித்துள்ளார். டெய்லிமிரர் மற்றும் சன்டே டைம்ஸ் ஆகிய ஊடகங்களின் பிராந்திய ஊடகவியலாளர் ஆவார்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக