ஐ.நா. செயலர் பான் கீ மூன், இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டு வருவதால் அவருக்கு தகுந்த பாடம் கற்பிக்கச் சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் அவர் இலங்கையிடம் மண்டியிடுவார் என்றும் பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கண்டியில் மேம்பாலம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயிரி ழக்கும்போது, தானும் உயிரிழந்து விடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது சகோதரர் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட போதும் தைரியத்தை இழக்காத ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ, திடமாக நின்று செயற்பட்டார் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் நாட்டின் வெற்றியை ஒருபோதும் காட்டிக்கொடுத்தில்லை. இவ்வாறான ஜனாதிபதிக்கு வலுசேர்க்கக் கிடைத்தமை மகிழ்ச்சியானது எனவும் இதனால் ஜனாதிபதியின் மரணம் சம்பவிக்கும் போது தனது மரணமும் நிகழும் எனவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
ஐ.நா. செயலர் பான்கீமூன், இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டு வருவதால் அவருக்கு தகுந்த பாடம் கற்பிக்க சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை வரலாறு தொடர்பான வம்சக்கதைகளை பான் கீ மூனுக்கு அஞ்சலில் அனுப்பி வைக்க போகிறார் எனவும்
மொழிமாற்றம் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும் அதிலிருந்து தகுந்த பாடம் கற்றுக்கொள்ளும் பான் கீ மூன், இலங்கையிடம் மண்டியிடுவார் என்றும் மேர்வின் சில்வா கூறினார்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக