வெள்ளி, 23 ஜூலை, 2010

இந்திய அரசியல்மாதிரி கூத்தாடிகள் அமைச்சர்கள் ஆனால் ...பான்கிமூனை மண்டியிட வைப்பேன் மேர்வுன் சில்வாவின் கர்ச்சிப்பு

ஐ.நா. செயலர் பான் கீ மூன், இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டு வருவதால் அவருக்கு தகுந்த பாடம் கற்பிக்கச் சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் அவர் இலங்கையிடம் மண்டியிடுவார் என்றும் பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.



கண்டியில் மேம்பாலம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயிரி ழக்கும்போது, தானும் உயிரிழந்து விடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தனது சகோதரர் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட போதும் தைரியத்தை இழக்காத ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ, திடமாக நின்று செயற்பட்டார் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் நாட்டின் வெற்றியை ஒருபோதும் காட்டிக்கொடுத்தில்லை. இவ்வாறான ஜனாதிபதிக்கு வலுசேர்க்கக் கிடைத்தமை மகிழ்ச்சியானது எனவும் இதனால் ஜனாதிபதியின் மரணம் சம்பவிக்கும் போது தனது மரணமும் நிகழும் எனவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.


ஐ.நா. செயலர் பான்கீமூன், இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டு வருவதால் அவருக்கு தகுந்த பாடம் கற்பிக்க சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை வரலாறு தொடர்பான வம்சக்கதைகளை பான் கீ மூனுக்கு அஞ்சலில் அனுப்பி வைக்க போகிறார் எனவும்
மொழிமாற்றம் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும் அதிலிருந்து தகுந்த பாடம் கற்றுக்கொள்ளும் பான் கீ மூன், இலங்கையிடம் மண்டியிடுவார் என்றும் மேர்வின் சில்வா கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக