வியாழன், 16 டிசம்பர், 2010

விடுதலைப்புலிகளால் உயிருக்கு ஆபத்து அல்ல. இவர்களால் தான் தமிழ் இனத்திற்கு ஆபத்து’-சீமான்

பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலமைச்சர் கருணாநிதி, மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் உள்பட நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு, விடுதலைப்புலிகளால் ஆபத்து இருப்பதாகவும், தமிழகத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படியும், மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தமிழக போலீஸ் டி.ஜி.பி லத்திகா சரண் தெரிவித்தார்.



இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


’’ஜனவரியில் சென்னைக்கு வருகை தரும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், தமிழக முதல்வர் கருணாநிதியையும் விடுதலைப்புலிகள் கொலை செய்ய திட்டமிட்டி ருப்பதாக மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழக டி.ஜி.பி. லத்திகாசரண் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.


இன்றைய நிலையில் இலங்கையின் சூழலும் இந்தியாவின் சூழலும் பதட்டம் நிறைந்ததாக இருக்கிறது.


விடுதலைப்புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டு விட்டது என்று அறிவித்தவர்கள் இன்று தங்கள் பிழைப்புக்காக அவர்களை வைத்து பூச்சாண்டி காட்டுகின்றனர். விடுதலைப்புலிகளால் இவர்களின் உயிருக்கு ஆபத்து அல்ல. இவர்களால் தான் தமிழ் இனத்திற்கு ஆபத்து’’என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக