இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 16 டிசம்பர், 2010
விடுதலைப்புலிகள் இயக்கம் மாற்று தோற்றங்களில் செயற்படுகிறது
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டாலும், அது மாற்று தோற்றங்களில் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆசிய – மத்திய கிழக்கு ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், முழு ஆசியாவையும் அச்சுறுத்தும் இயலுமைக் கொண்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக