இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 3 பிப்ரவரி, 2010
பிழவுபட்ட சிறீலங்காப்படையினரை கட்டுப்படுத்த அரசு கடும் முயற்சி
சிறீலங்காப்படையில் இருந்து தப்பிச்சென்றவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகளில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
கடந்த காலங்களில் சிறீலங்காப்படையினரில் இருந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் மீண்டும் இணைத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக சிறீலங்காப் படைத்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி தப்பி ஓடிய சிறீலங்காப்படையினர் அருகில் உள்ள படைமுகாம்களில் இணைந்து கொள்ளுமாறு சிறீலங்காப்படைத்துறைப் பேச்சாளர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வாறு சேராதவர்களை தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கை ஒன்றிற்கு சிறப்பு படைப்பிரிவு ஒன்று ஈடுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இராணுவத்துள் பிழவு நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, அந்நிலமையை கட்டுப்படுத்தும் நோக்கோடு இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக