புதன், 3 பிப்ரவரி, 2010

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

யாழ். மாவட்டம் கொழும்புத்துறை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் 34 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மார்க்கண்டு சிவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் திரும்பாததையடுத்து, நேற்றுக் காலை தேடுதலின்போது கிணறு ஒன்றிலிருந்து அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக