இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 3 பிப்ரவரி, 2010
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
யாழ். மாவட்டம் கொழும்புத்துறை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்டவர் 34 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மார்க்கண்டு சிவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் திரும்பாததையடுத்து, நேற்றுக் காலை தேடுதலின்போது கிணறு ஒன்றிலிருந்து அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக