இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 3 பிப்ரவரி, 2010
சிறீலங்கா இராணுவத்துள் மோதல் - படையினன் பலி
சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சுக்கான பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவச் சிப்பாய்க்கும் மேலதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் துப்பாக்கி சூட்டில் முடிவடைந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (1) நடைபெற்ற இந்த சம்பவத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த கோப்ரல் சுஜித் குமார கொல்லப்பட்டுள்ளார். அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட படை சிப்பாய் உசான் மதுசங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மதுசங்கவை எதிர்வரும் 12 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு புறக்கோட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.
இதேவேளை சிறீலங்காவின் அருசுத்தலைவர் தேர்தலின் பின்னர், இராணுவத்துள் இரு பிரிவாக பிளவடைந்தமையும், அடிக்கடி இராணுவத்துக்குள் சரத் மற்றும் கோத்தா அணிகளுக்கிடையில் அவ்வப்போது மோதல்கள் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக