இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 3 மே, 2010
படைச்சிப்பாய் ஒருவர் தீமூட்டி தற்கொலை
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற போரில் அங்கவீனற்ற இராணுவச் சிப்பாயொருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீமூட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று பதுளை, மடுல்சீமை என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: நாட்டின் யுத்த சூழ்நிலையின் போது கடமையாற்றிய இந்த இராணுவ சிப்பாய், மோதல் சம்பவமொன்றில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், சிகிச்சையின் போது அவருடைய பாதிக்கப்பட்ட காலொன்று அகற்றப்பட்டது. அங்கவீனரான மேற்படி நபர் மருத்துவமனையிலிருந்து வெளியேறி வீட்டிற்கு வந்ததையடுத்து, வீட்டிலேயே முடங்கி வாழ வேண்டி நிலையேற்றபட்டது. சம்பவ தினம் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தனக்குத் தானே மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீமூட்டிக் கொண்டார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அயலவர்கள் தீயை அணைத்ததுடன் உடனடியாக அவரை பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்தனர். ஆனாலும் அவரது உயிர் ஏற்கனவே பிந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மடுல்சீமையைச் சேர்ந்த ஆர்.எம். சோமரட்ன என்ற 29 வயது நிரம்பிய அங்கவீன முற்ற இராணுவ சிப்பாயே மேற்படி மரணமானவராவார். இச்சம்பவம் தொடர்பில் மடுல்சீமை பொலிஸார் தீவிர புலன்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக