இலங்கை அரசானது, தமிழ் மக்கள் சார்பாக 2009 மே வரை போராடிய இரணுவக்கட்டமைப்பினை இல்லாதொழித்துவிட்ட தலைக்கனத்தில் உலக ரீதியில் தனது காய்களை நகர்த்தி வருகின்றது. இதில் தன்னால் மேற்கொண்ட போர் நடவடிக்கைகளில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை மூடி மறைக்க
வல்லரசுகளின் கரங்களைக்கோத்து நிற்கின்றது. இதற்கு தற்போதைய அரச அதிபரின் சர்வதேச பதவிகள் (சாக்…, ஜீ… ஐ.நா… நாடுகள்) மேலும் கைகொடுத்து வருகின்றமை மறைக்கமுடியாத உண்மையாகும். இந்த நிலையில் புலிகளை நிர்மூலமாக்கிய மர்மத்தை விபரமறிந்த புலி பொறுப்பாளர்களும் (தளபதிகளும்) புலத்து துணைவர்களும் வாய்திறக்காது மௌனித்து வருகின்றமை பலத்த சந்தேகங்களை எழுப்பினாலும், இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்களை சிறைப்படுத்தியதென்பது, வெளிப்படையாக சில மர்மங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகின்றது. அதாவது, கழுத்தில் எக்கரணத்தையிட்டும் கழற்றாத சைனற் குப்பிகளைத் தாண்டியும் போர்க்களத்தில் காணப்படும் சன்னக்குப்பிகளைத் தாண்டியும் இவர்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்றால், … … … … !!! ??? அதுவாகில், இறுதி கட்டத்தில் புலிகள் சரணடைய எத்தனித்த படலமானது, முக்கிய உறுப்பினர்களான அரசியல் துறைப்பொறுப்பாளரான நடேசன் மற்றும் சிலரின் மரணத்தில் தொடர்கின்றது. ஆனால் பல தளபதிகள் இன்னமும் உயிருடன் இராணுவத்தினரிடம் இருக்கின்றார்கள் என்றால்… அவர்களின் மரணம் மட்டும் எப்படி நிகழ்ந்தது…. இல்லை, இவ்வாறு பார்த்தால் புலிகள் சரணடையாத பட்சத்தில் குறுகிய நிலப்பரப்பில், பல தற்கொடைக் கரும்புலிகளைக் “குவி”முனைக்குக் கொணர்ந்தபோதிலும் புலிகளின் இறுதிக்கட்ட “பன்முனை” நகர்வை எதிர்கொள்ளாது, நச்சு வாயுவை பிரயோகித்து மயக்கமுறவைத்து புலிகளைக் கவ்வியிருக்க்கூடிய சந்தர்ப்பமும் இல்லாமல் இல்லை!!! அப்படியாகில் மகிந்த அரசிற்கு எதிராக சரத் முகங்கொடுத்த போது வாளாவிருந்ததிலிருந்து முற்போக்காளரிடையே ஒரு பெரும் இன்னொரு மர்மத்தை வெளிச்சப்படுத்தியுள்ளது. அதாவது, எவ்வாறான சூழல் ஏற்பட்டபோதிலும் தேர்தல் காலத்தில் இதுதொடர்பாக எந்த உறுதியான பதிலையும் மக்கள் முன்னிலையிலோ அல்லது கூட்டமைப்பின் முன்னிலையிலோ சரத் விடவில்லையென்றால், அது இராணுவ இரகசியமன்று, சரத்திடம் மறைக்கப்பட்ட இரகசியமே!!! இதனாலேயே சரத்திற்கும் மகிந்தவிற்கும் இடையில் தர்க்கங்கள் எழுந்திருக்கக்கூடுமே ஒழிய பதவிக்கென பிளவுகள் தோன்றியது என்பது சாதாரண மக்களுக்கும், அரசியல் அறிவற்ற அரசியல் வாதிகளுக்கும் மூடுபனியென்றால் அது மிகையல்ல! அப்படியாயின் சரத்திடம் மறைக்கப்பட்ட விடயம் என்ன? மிகச் சுலபம்… புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பானதே!!! புலிகள் பலதடவை குறிவைத்த சரத் தப்பிப்பிழைத்தார் என்று பத்திரிகைகளும் இணையங்களும் ஆரம்பகாலந்தொட்டே வெளிப்படுத்தியதும், போர் இறுதிக்கட்டத்தை அடையும்போது “பிரபாவை” கொன்றேதீருவேன் என்ற சரத்தின் கச்சைக்கட்டையும் யாரும் மறந்திருக்க முடியாது, இந்த நிலையில் பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் இறுதி நேரத்தில் சரத்தின் நடவடிக்கைகள் வன்னியை நோக்கியிராது சர்வதேசத்தையே நோக்கியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் இருந்து புரிந்து கொள்ளக்கூடிய விடயம் என்னவென்றால், பிரபாகரனை உயிருடன் பிடிப்பதே மகிந்தவுடைய திட்டமே ஒழிய கொல்வதல்ல. அந்த மகிந்தவுடைய திட்டத்தில் சரத் பெரிய ஓட்டையைப் போட்டுவிடுவார் என்பதற்காகவே, அவருக்குத்தெரியாத பல இரகசியத்தை மகிந்த குடும்பசகிதம் அதிகாரத்தைப் பயன்படுத்தி மூடிவிட்டது. இதையறிந்த சரத் குழம்பாமல் என்னசெய்வார்… முப்படைத் தளபதியல்லவா? … எனினும், தற்காலிகமாக சரத்தின் வாயை மூடியே ஆகவேண்டும். இதன் பின்னர் இன்னும் கொஞ்சநாளில் மகிந்த அரசிற்கான சர்வதேச அழுத்தங்கள் குறையும்போது, சரத்திற்கு ஒரு அமைச்சுப் பதவி காத்திருக்கின்றது மட்டுமல்லாது, அவருக்காக மாபெரும் விருதொன்றும் தேசிய மதிப்பொன்றும் வழங்கப்பட்டே ஆகும். அதுவரை சரத்தின் சட்டநடவடிக்கைகள் அப்படியும் இப்படியும் நகர்ந்தே தீரும். அதுமட்டுமல்லாது சரத்தின் வாக்குமூலம் இறுதிவரை தேவைப்படும் அதனால் அவரைக்கூட தனது கண்பார்வைக்கு தூரத்தே செல்லவிடாது கண்ணுக்குள் விளக்கெண்ணையினை ஓற்றிக்கொள்ளவே அவர் சிறைப்படுத்தப்பட்டாரே ஒழிய அரசில் யாரும் செய்யாத ஊழலை அவர் செய்ததால்தான் சிறைப்படுத்தப்பட்டார் என்றால் அதை எம்மைப்போன்றோர் நம்புவதுபோல் நடித்கே ஆகவேண்டும். இந்த சூழலில் இறுதிக்கட்டத்தில் நடந்த சம்பவத்தைவைத்துப் பார்க்கும் போது, புலிகளின் தலைவர் இலங்கை அரசின், அதிலும் மகிந்தவின் விசேட கண்காணிப்பில் ஓட்டைவிழாத குவளையில் வைக்கப்பட்டுள்ளார் என்ற சந்தேகம் எழாமல் இல்லை… அதற்காக புலிகளின் ஆதரவாகச் செயற்பட்டோரும் நலன்விரும்பிகளும் கூறுவதுபோல் ஆதாரமில்லாத விளக்கங்களை வைத்து மக்களைக் குழப்புவது பொருத்தமற்றது. நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போதும், நடைபெறுகின்ற அனர்த்தத்தைப் பார்க்கின்றபோதிலும் இந்த மர்மங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. இன்றுவரை தீவிர வாதத்தை ஒழித்தாகிவிட்டதென்று மகிந்த கூறினாரே ஒழிய, பிரபாகரனை கொன்று விட்டதாக கூறவில்லையே! மேலும் பிரபாகரனின் உடல் என்று சொல்லப்படுவதை வைத்து… வைத்தே காலம்…, காலமாக தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பை சிங்களவர்களிடம் இருந்து அதிகமாகப் பெறாமல் எதற்காக உடலத்தை மறைத்துவைக்கவேண்டும். இராணுவ சட்டத்தின்படி கைப்பற்றப்பட்ட தலைவர்களின் உடலத்தை தகுந்த மரியாதையுடன் முறைப்படி அதற்கான கிரிகைகளுடன் காரியங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இருக்கின்றபோது, தாய் தந்தை மற்றும் உறவினர்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த போது எதற்காக கருணாவை கொண்டு சடலத்தை உறுதிப்படுத்த வேண்டும். “தாய்க்குத் தெரியாதா பிள்ளையின் மணம்”. மேலும் மரபணுசோதனையினை இறந்த மகனைவைத்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன அதுதான் இறக்காத பெற்றோர்களே இருந்தார்களே கைவசம்!!! முள்ளிவாய்க்காலில் இருந்து இன்றுவரை இடம்பெற்ற அனைத்தையும் அதாவது, புலிகளின் மற்றும் அவர்களின் சர்வதேச ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை அணுவணுவாக தலைவருக்குப்படம் போட்டுக்காட்டினால் அவரே வேதனையுடன் கண்ணீர் வடிப்பார்… காரணம் இத்தனை கட்டுக்கோப்பாக முப்பது வருடத்திற்கும் மேல் காத்துவந்ததை குழவிகூட்டில் கல்லெறிந்தது போல் ஒருவருடத்தில் “நான் இல்லை என்றதும் சின்னாபின்னமாக்கி விட்டார்களே!!!” என்று இரத்தக்கண்ணீர் வடித்து இத்தனை காலமும் தமிழர்களுக்காகவே நடத்திய அமைப்பை இட்டு வெட்கப்பட்டு, தன்னால் தமிழீழம் கிடைத்திருந்தால்; தமிழீழம் எப்படிச் சின்னாபின்னமாய்ப்போகும் என்பதனை உளவியல் உண்மையுடன் அவருக்குக்காட்டி, சர்வதேசம் தொடர்பாக புலிகளின் அனைத்து உண்மைகளையும் அவரிடம் இருந்து பெற்றுவிடலாம் என்ற அற்ப ஆசையாகக்கூட மகிந்தவிற்கு இருந்திருக்க இராஜ “தந்திரம்” இடம் கொடுக்கின்றது. உதாரணம் சர்வதேச பார்வையில் இருந்து பிடிபட்ட கேபிக்கு இன்னமும் விசாரணை முடியவில்லை என்பதும் அதற்கான தண்டனை வழங்கப்படவில்லை என்பதும். இதனை ஏற்றுக்கொள்ளாத, சகித்துக்கொள்ளாத பலத்த ஆதரவாளர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆனால் முற்போக்குச் சிந்தனையுடையோரால் இதற்கு மேலும் சிந்திக்க முடியும் என்பதனை மகிந்த நன்கு அறிந்தவராய் மர்மங்களை மர்மங்களாகவே இறுதிவரை வைத்திருக்க விரும்புகின்றார். இதில் ஒரு விடயத்தை உற்று நோக்க வேண்டும் அதாவது, இத்தனை காலமும் அமைச்சராக இருந்த டக்ளசை விடுவோம், அவர் பல தேர்தலில் தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார். தேர்தலில் தனது ஆதரவாக நிறுத்திய அபேட்சகர்களுக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காத போதிலும் கருணாவிற்குப் பதவியொன்று வழங்கப்பட்டிருக்கின்றது என்றால் சிந்தனா சக்தி உள்ளோருக்கு, சிந்திக்கத்தக்கவர்களுக்கு புரிந்து கொள்ளச் சிரமம் இருக்காது. இந்த பதவி வழங்கல்களுக்கும் ஒரு இடைவேளை இருக்கின்றது. அந்த இடைவேளைகூட எது வாகும் என்பதனை பல ஆக்கத்தில் எழுதியிருக்கின்றேன். அது எதுவரைக்கும் என்று… கருணா சிறையில் இருந்த போதே அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று 2007ம் ஆண்டு எழுதி 2008ம் ஆண்டு வெளியிட்ட “மாறும் மா தமிழீழம்” ஜனநாயக சோசலிசக் குடியரசாக… என்ற நாவலில் பதிந்து வைத்தேன். அது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டுமல்ல, அமைச்சராகவும் தற்போது பிரதி அமைச்சராகவும் நியமித்திருக்கின்றது என்றால் அது ஒரு காரணத்திற்காகவே!!! இது இப்போது அவசியமற்றது. அவசியமானது எதுவென்றால், இத்தனை இக்கட்டான சூழலிலும் தம்மை ஒரு கற்பனையல்ல நிரந்தர அரச அதிகாரத்தைப் பெறக்கூடிய ஆளுமையுடைய இனம் எனத்தெரிவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள புலத்துத் தேர்தல்கள் முடியுந்தறுவாயிலும், இலங்கை அரசு அது தொடர்பாக பலத்த அரசியல் எறிகணைகளை வீசாது தயார் நிலையில் வைத்திருக்கின்றது என்றால்… … … !!! ??? இத்தனை பலமான புலிகளின் இராணுவ கட்டமைப்பையும் தகர்த்த இலங்கை அரசு, இந்த அரசியல் கட்டமைப்பை குலைக்க ஏதோ அச்சப்படுவதிலிருந்து, சற்றேனும் வெற்றிப்பாதை தெரிகின்றதா என்ற ஐயப்பாடு தமிழர்களுக்கு எழாமலில்லை! இதிலும் தேர்தலில் பங்கு கொண்டவர்கள் “மரண பயமற்ற சூழலில்” ஒரே கோட்பாடுடன் தொடர்ந்தும் இயங்குவார்கள் என்ற கேள்வி இருந்தாலும், முள்ளிவாய்க்காலில் முடிக்கப்பட்ட போராட்டத்தை, எல்லைகளற்று அதே நினைவு நாளில் ஆரம்பித்து வைக்கவேண்டுமென்ற பிடிவாதத்தின் முடிவு தலைவரின் கண்களில் “ஆணந்தக் கண்ணீருக்குப் பதிலாக இரத்தக் கண்ணீரை” கொணராது போனால் சரி என்பதே எனது எழுத்துக்களின் முடிவு. தமிழர்களுக்கு ஒரு தனி தேசம் கிடைப்பதை எந்த தமிழனும் தடைசெய்ய மாட்டான். ஆனால் அதனை நடாத்துவதற்காக அணுகுகின்ற முறைகளிலேயே விவாதங்களும் விவேகங்களும் பிளவுபடுகின்றது. இந்த விவேகம் சிறப்பாக அமையுமிடத்து யார்தான் பின்தொடரார். ஆனால் அது தற்போது தெரிவாகியுள்ள அங்கத்தவர்களின் அறிவின் போக்கிலும் ஆளுமையின் போக்கிலுமே தங்கியுள்ளது. தமிழனின் இராணுவப்பலத்தை பல படையினைக்கொண்டாயினும் அழித்ததைப்போல், தமிழர்களின் பெயரில் இயங்கவிருக்கும் இந்த எல்லைகளற்ற அரசு இன்னுமொரு அரசியல் போரால் இலங்கை அரசால் நிர்மூலமாக்கப்படாது, பலமாக, திடமாகக் கட்டியெழுப்ப அமைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக