
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 3 மே, 2010
அதிகார துஸ்பிரயோக குற்றச்சாட்டு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மேயர் யோகேஸ்வரி அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக யாழ் மாநகர சபை எதிர்க்கட்சியும் யாழ் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பொதுமக்கள் அமைப்புக்களும் குற்றஞ் சாட்டியுள்ளன. யாழ். பிரதான சாலையில் புத்தர் சிலையை நிறுவுவதற்கும் யாழ் பொது நூலக சிற்றுண்டிச் சாலையின் நிர்வாகத்தை தென்னிலங்கை சிங்களவிரடம் ஒப்படைப்பதற்கும் அவர் இணங்கியதாகவே இந்தக் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன என யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ் குடாநாட்டு சைவ கலாசார அமைப்புக்கள் எவ்வளவோ எதிர்ப்புத் தெரிவித்தபோதும், புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில், யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதித் தமிழ் மன்னன் சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த வளாகத்தினுள் நட்சத்திர விடுதி ஒன்றை நிறுவுவதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேயர் யோகேஸ்வரி பற்குணம் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார். அதேவேளை, சிங்கள வர்த்தகர்கள் யாழ் குடாநாட்டில் சட்டவிரோதமாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிராகவும் யாழ்ப்பாண வர்த்தக ஒன்றியம் தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக