வெள்ளி, 18 ஜூன், 2010

குடிநீருக்காக எம்மக்கள் ஏங்கிக் கொண்டிருக்க ஹொலி வூட்டில் உல்லாசிக்கின்றார் மகிந்தா!

எம் மக்களை எதிலிகளாக்கி குடி நீருக்கு ஏங்கித் தவிக்க விட்டு, திரைப்படம் தயாரிக்க 80 இலட்சம் இந்திய ரூபாக்களை முதலீடு செய்கின்றார் மகிந்த.



கொழும்பில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவிற்கு சென்றிருந்த ஹிந்தி நடிகர் விவேக் ஒபராயை கதாநாயகனாகக் கொண்டு வட இந்தியாவை மையமாகக் கொண்டு திரைப்படம் ஒன்றை தயாரிக்க மகிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ச பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.


இந்தப் பட முதலீட்டிற்கென சுமார் 80 கோடி இந்திய ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்புடைய வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது.


வன்னி மக்களுக்கான அடிப்படை நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளாது 80 கோடி இந்திய ரூபாவை திரைப்படத்திற்காக முதலீடு செய்திருப்பது குறித்து பல்வேறு விமர்சனங்களை தோற்று விக்கும் எனக் கருதிய மகிந்த, நாமலின் நெருங்கிய நண்பர்கள் சிலரது பெயர்களிலேயே இந்தப் படத்திற்கான முதலீடுகள் மேற்கொண்டிருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக