வெள்ளி, 18 ஜூன், 2010

ஒட்டுகுழுக்களின் துண்டுப்பிரசுரம் ....தமிழ்சினிமா எதிர்ப்பு வாரமாம் ....

இலங்கையில் மட்டக்களப்பில் அமைந்திருக்கும் திரையரங்கத் திரைகளுக்கு தீவைப்பு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நடவடிக்கை இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. மேலும் அவர்கள் ஒரு துண்டுபிரசுரத்தையும் விட்டுச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.



அந்த துண்டுப் பிரசுரத்தில் அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ‘iifa’ இந்திய சர்வதேச திரைப்பட விழாவை இலங்கையில் நடைபெறவிடாது தடுத்து இலங்கை ஜனாதிபதியையும் இலங்கை அரசையும் அவமானப்படுத்த முனைந்த தென்னிந்திய தமிழ் சினிமா சமூகத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கவும்,


இந்திய சினிமா வியாபாரம் இலங்கையிலும் தங்கியுள்ளது என்பதை காண்பிக்கவும் எதிர்வரும் 18.06.2010 தொடக்கம் 30.06.2010 வரை வடகிழக்கில் தென்னிந்திய சினிமா எதிர்ப்பு வாரமாக பிரகடனம் செய்து 18.06.2010 தொடக்கம் 30.06.2010 வரை வடகிழக்கு சினிமா அரங்குகளில் இந்திய தமிழ் படங்களை திரையிடுவதை தவிர்த்து எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு படமாளிகையினரையும் ரசிகர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் – சுதந்திர இலங்கையின் தமிழர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக