இலங்கையில் மட்டக்களப்பில் அமைந்திருக்கும் திரையரங்கத் திரைகளுக்கு தீவைப்பு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நடவடிக்கை இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. மேலும் அவர்கள் ஒரு துண்டுபிரசுரத்தையும் விட்டுச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த துண்டுப் பிரசுரத்தில் அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ‘iifa’ இந்திய சர்வதேச திரைப்பட விழாவை இலங்கையில் நடைபெறவிடாது தடுத்து இலங்கை ஜனாதிபதியையும் இலங்கை அரசையும் அவமானப்படுத்த முனைந்த தென்னிந்திய தமிழ் சினிமா சமூகத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கவும்,
இந்திய சினிமா வியாபாரம் இலங்கையிலும் தங்கியுள்ளது என்பதை காண்பிக்கவும் எதிர்வரும் 18.06.2010 தொடக்கம் 30.06.2010 வரை வடகிழக்கில் தென்னிந்திய சினிமா எதிர்ப்பு வாரமாக பிரகடனம் செய்து 18.06.2010 தொடக்கம் 30.06.2010 வரை வடகிழக்கு சினிமா அரங்குகளில் இந்திய தமிழ் படங்களை திரையிடுவதை தவிர்த்து எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு படமாளிகையினரையும் ரசிகர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் – சுதந்திர இலங்கையின் தமிழர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக